பிரான்ஸ் மதிப்புமிக்க வெள்ளி-தங்க பொருட்கள் திருட்டு: இலங்கை விமானப்படை அதிகாரி மீது புகார்

இலங்கை விமானப்படையின் உயர்தர அதிகாரி ஒருவரை குறித்துப் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் போலீசாரிடம் புகார் செய்துள்ளார்.

பிரான்ஸ் மன்னர் பதினான்காம் லூயிஸ் காலத்தில் தயாரிக்கப்பட்ட, ஒரு மில்லியன் ரூபாவுக்கு மேல் மதிப்புள்ள வெள்ளி மற்றும் தங்க முளாம் பூசப்பட்ட பொருட்கள் இழப்புக்குள்ளாகியதற்காக இந்த புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலங்கம, ஹோகந்தர தெற்கு, எவரிஹேன பகுதிகளில் 34 ஆண்டுகளாக வசித்து வரும் 86 வயதான இந்த பிரெஞ்சு பெண், தனது வீட்டில் நண்பர் சந்திப்புகள் மற்றும் விருந்துகளை வழக்கமாக ஏற்பாடு செய்யும் பழக்கம் உள்ளதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

அவரின் குற்றச்சாட்டு படி, கடந்த ஆண்டு மே 27 முதல் ஜூன் 4 வரை நடந்த விருந்தில் விமானப்படை உயர்தர அதிகாரி கலந்து கொண்டார் என்றும், அவர் வீட்டில் தங்கியிருந்தார் என்றும் கூறியுள்ளார். அந்த நேரத்தில், வீட்டில் பணியாற்றும் ஒருவர் அலுமாரியில் இருந்து பொருட்கள் திருடப்பட்டதை கண்டார். பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அலுமாரியில் இருந்த மதிப்புமிகு பொருட்கள் காணாமல் போனது தெரிய வந்ததாக பெண் தெரிவித்தார்.

திருடப்பட்ட பொருட்கள் பட்டியல்:

  • 20 வெள்ளி கரண்டிகள், முள் கரண்டிகள் மற்றும் கத்திகள்
  • 14 வெள்ளி தேநீர் கோப்பைகள்
  • 14 இரவு உணவு தட்டுகள்
  • 3 சூப் கரண்டிகள்
  • 16 வெள்ளி இனிப்பு தட்டுகள்
  • 10 தங்க முளாம் பூசப்பட்ட கரண்டிகள்
  • 10 தங்க முளாம் பூசப்பட்ட தேநீர் கோப்பைகள்
  • 10 தங்க முளாம் பூசப்பட்ட கண்ணாடிகள்
  • 24 குடிநீர் கோப்பைகள்
  • 2 வெள்ளி நகை பெட்டிகள்
  • 1 ஜோடி வெள்ளி காதணிகள்
  • 1 சிவப்பு சூட்கேஸ்

விருந்துக்குப் பிறகு உடல்நலக்குறைவால் சிகிச்சைக்காக வெளிநாடுக்கு சென்ற பின்னர், கடந்த 26ஆம் திகதி அவர் இந்த புகாரை பதிவு செய்துள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *