முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தங்காலையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கை சந்தித்த பின்னர், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட நட்பு மற்றும் பரஸ்பர மரியாதை மிகுந்த அரசியல் கலாசாரம் பற்றி பேசியுள்ளார். மகிந்த ராஜபக்ச கூறுவதாவது, “நாங்கள் திறந்த மனதுடன் உரையாடினோம். அரசியல் நிலைப்பாட்டில் வேறுபாடுகள் இருந்தாலும், தேசிய பொறுப்புகளை நிறைவேற்றும் போது பரஸ்பர மரியாதையை பேணக்கூடிய கலாசாரத்தின் பாரம்பரியத்தை இருவரும் பகிர்ந்துகொள்கிறோம். என் அன்பான ரணில் விக்ரமசிங்கவின் வருகைக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். மைத்ரி விக்ரமசிங்கவையும் மரியாதையுடன் நினைவுகூர்கிறேன்.”
இது அவர் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
